சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – மாணவர்கள் கோரிக்கை!!
சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுத்தேர்வுகள் ரத்து:
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் 4 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டார். இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 1 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். சில மாநிலங்களில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் கட்டாயம் நேரடியாக நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? தீவிர ஆலோசனை!
இது குறித்து அவர்கள் கூறுகையில், “கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் இருக்கும். எனவே தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஆன்லைன் மூலமாக நடத்தப்பட வேண்டும்”, எனவும் சில மாணவர்கள் ட்விட்டர் மூலமாக #cancelboardexams2021 என ட்ரெண்ட் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
12 exam cancel pannuga 😞🙏🏻