பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை ஒட்டி புதுச்சேரியில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் 7 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலையொட்டி புதுச்சேரியில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மைக்கேல் பென்னோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை முதல் 7 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டுமாக துவங்கும் என கூறப்பட்டிருந்தது.
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு – ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு !
முன்னதாக புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இதில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுவது சிபிஎஸ்சி மாணவர்களுக்கா? அரசு பள்ளி மாணவர்களுக்கா? என குறிப்பிடப்படாததால் மாணவர்களும்,பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்