மதுரை காமராஜர் பல்கலைக்கு உயர் அந்தஸ்து – தேசிய தர மதிப்பீடு!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் ஆய்வின் அடிப்படையில் உயர் அந்தஸ்து வழங்கியுள்ளது.
காமராஜர் பல்கலை:
காமராஜர் பல்கலைக்கழகம் மதுரையில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது. காமராஜர் பல்கலைக்கழகத்தில் 7 மாலை நேர கல்லூரிகளும், 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளும் இயங்கி வருகிறது. முன்னதாக இப்பல்கலைக்கழகம் பல்கலைக்கழக நிகர்நிலை குழுவினால் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய இணை அமைச்சர் அறிவிப்பு!!
உயர் அந்தஸ்து:
தேசிய தரமதிப்பீட்டு கவுன்சில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வின் முடிவில் (ஏ++) அந்தஸ்தை பல்கலை பெற்றுள்ளது. பல்கலையின் பாடத்திட்டம், மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் தகுதி, நிர்வாகம், ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்றவை குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டது. சி.ஜி.பி.ஏ இதற்காக மொத்தம் 3.54 புள்ளிகள் வழங்கியது.
துணை வேந்தர் அறிவிப்பு:
காமராஜர் பல்கலைக்கழகம் உயர் அந்தஸ்து பெற்றுள்ள நிலையில் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம், பல்கலையை சேர்ந்த அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் உழைப்பின் காரணமாக தான் இந்த உயர் அந்தஸ்து கிடைத்துள்ளது. மொத்தம் 7 பிரிவுகளில் நடத்திய ஆய்வின் முடிவில் கலை பாடத்திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கு முழு மதிப்பெண்கள் கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்