நாடு முழுவதும் காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய இணை அமைச்சர் அறிவிப்பு!!
நாடு முழுவதும் காவல் துறையில் ஐந்து லட்சதுக்கும் அதிகமான காலிப்பணி இடங்கள் உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிருஷ்ணன் ரெட்டி அறிவித்துள்ளார்.
காவல்துறை:
காவல்துறையின் மூலமாக தான் ஒரு நாட்டின் சட்டம் செயல்படுத்தப்படுகிறது, சட்ட ஒழுங்கு காக்கப்டுகிறது, நாட்டின் உடமைகள் பாதுகாக்கப்படுகிறது. பொதுமக்கள் செய்யும் குற்றங்களை கண்டறிதல், விசாரணை நடத்துதல், பொதுமக்களை பாதுகாப்பது, கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளும் செய்யப்படுகிறது.
அரசு பள்ளி மாணவிகளில் மேலும் 6 பெற்றோர்களுக்கு கொரோனா உறுதி – கட்டுப்பாடுகள் தீவிரம்!!
காலிப்பணி இடங்கள்:
மக்களவை கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்தது. அதில், திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாரிவேந்தர் அவர்கள் நாடு முழுவதும் காவல்துறையில் உள்ள காலிப்பணி இடங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இது குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிருஷ்ணன் ரெட்டி அவர்கள் எழுத்துப் பூர்வமாக மக்களவையில் பதில் அளித்துள்ளார்.
காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் (பிபிஆர்&டி) தந்த தகவலின் படி, நாடு முழுவதும் இதற்கு முன்னர் 26,23,225 பணியிடங்கள் இருந்தது. அதில், இதுவரை 20,91,488 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. இன்னும் 5,31,737 காலிப்பணி இடங்கள் இன்னும் காலியாக உள்ளது. அதிலும், உத்தரபிரதேச காவல்துறையில் 1,11,865 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்