கலைமாமணி விருது வழங்க நிபுணர் குழு – அரசு பதிலளிக்க உத்தரவு!!
கலைமாமணி விருதுகள் வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவை அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது:
கலை மற்றும் பண்பாட்டில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு அவர்களின் செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக அரசினால் வழங்கப்படும் உயரிய விருதாக கலைமாமணி விருது கருதப்படுகிறது. 1954ம் ஆண்டில் இருந்து கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய எழுத்தர் பணி – நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு!!!
வழக்கு தாக்கல்:
தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்துள்ளார். அதில், மாவட்ட அளவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 வயது முதல் 35 வயதுடையவர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதுடையவர்களுக்கு கலை சுடர் மணி விருதும், 51 வயது முதல் 60 வயது உடையவர்களுக்கு கலை நன்மணி விருதும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டில் கலைமாமணி விருதுகள் அவசர அவசரமாக வழங்கப்படுகிறது. தமிழ் இயல், இசை, நாடக மன்றம் கலைமாமணி விருதுக்கான விண்ணப்பங்களை பெற்று பரிசீலிக்கவில்லை. கலைமாமணி விருதுகள் வழங்குவது தொடர்பாக உரிய விதிகளை அமைக்க வேண்டும். இதனால் தனி நபர்களும், தகுதியில்லாதவர்களும் விருதுகள் பெறுகின்றனர். தகுதியான கலைஞர்களுக்கு விருது கிடைக்காமல் உள்ளது.
டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் மாற்றம் – தலைமை செயலாளர் உத்தரவு!!
இதனால் நன்கு பரிசீலித்து நிபுணர் குழு அமைத்து தகுதியானவர்களை தேர்வு செய்து விருது வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்