தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய எழுத்தர் பணி – நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு!!!
பணி விவரங்கள்:
தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள எழுத்தர் பணிக்கு 37 காலிப்பணி இடங்களும் மற்றும் ஓட்டுநர் பணிக்காக 32 காலிப்பணி இடங்களும் உள்ளதாக அறிவிப்பு கடந்த 2020 செப்டம்பர் மாதம் வெளிவந்தது. விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளிவந்தது.
6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்.,24 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அனுமதி!!
நேர்முகத்தேர்வு:
இந்நிலையில் பதிவுரு எழுத்தர் பணிக்காக பிப்ரவரி 24ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும், ஓட்டுநர் பணிக்காக பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 1, 2ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஓட்டுநர் செயல்திறன் தேர்வு நடக்க இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அதிகார்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. தேர்வு நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுளள்து.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்