டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் மாற்றம் – தலைமை செயலாளர் உத்தரவு!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் மாற்றம் செய்யப்பட்டு நிதித்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
TNPSC செயலாளர் மாற்றம்:
டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணி அமர்த்தப்பட்டார். 3 ஆண்டுகளாக அவர் சிறப்பாக பணியாற்றி குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 போன்ற தேர்வுகளில் புதிய பாடத்திட்டம், தேர்வு முறைகளில் மாற்றம், விடைத்தாள் மதிப்பெண் முறைகேடுகள் போன்றவற்றால் மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக பணியாற்றி வந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட உத்தரவின் படி, டிஎன்பிஎஸ்சி.,யில் 3 ஆண்டுகள் பணியில் இருந்த செயலாளர் நந்தகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு நிதித்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மேலும் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் நிர்வாக இயக்குனராக, தமிழ்நாடு தொழில் முதலீடு இயக்கத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் எம்.ஆர்த்தி மாற்றப்பட்டுள்ளார்.
யு.பி.எஸ்.சி தேர்வுகளில் மறுவாய்ப்பு கிடையாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கீ ஆன்சர் வெளியிடுவதற்கு தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக கோரிக்கைகளை விண்ணப்பிக்கலாம் என்ற முறையை கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்