யு.பி.எஸ்.சி தேர்வுகளில் மறுவாய்ப்பு கிடையாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

0
யு.பி.எஸ்.சி தேர்வுகளில் மறுவாய்ப்பு கிடையாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
யு.பி.எஸ்.சி தேர்வுகளில் மறுவாய்ப்பு கிடையாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
யு.பி.எஸ்.சி தேர்வுகளில் மறுவாய்ப்பு கிடையாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

மத்திய அரசு மூலமாக நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான யு.பி.எஸ்.சி தேர்வுகளில் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு  நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி மறுதேர்வு:

மத்திய அரசு பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான யு.பி.எஸ்.சி தேர்வு மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அந்த தேர்வுகள் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் அக்டோபர் மாதம் நிவர் மற்றும் புரவி புயல் தாக்கம் மற்றும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக யு.பி.எஸ்.சி தேர்வுகளில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதன் காரணமாக வயது வரம்பை கடந்து தேர்வு எழுத காத்திருந்தவர்களும் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. எனவே யு.பி.எஸ்.சி தேர்வுகளில் மறு வாய்ப்பு வழங்குமாறு தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நாளை பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் – அரசு உயர் அதிகாரி தகவல்!!

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் கொரோனா தாக்கம் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக தேர்வுகளில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடியாது என தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!