தமிழகத்தில் நாளை பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் – அரசு உயர் அதிகாரி தகவல்!!

0
தமிழகத்தில் நாளை பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் - அரசு உயர் அதிகாரி தகவல்!!
தமிழகத்தில் நாளை பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் - அரசு உயர் அதிகாரி தகவல்!!
தமிழகத்தில் நாளை பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் – அரசு உயர் அதிகாரி தகவல்!!

தமிழகத்தில் நாளை முதல் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு நாளை பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை வேலைநிறுத்த போராட்டம்:

தமிழகம் முழுவதும் நாளை போக்குவரத்து துறை ஊழியர்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. போக்குவரத்து கழகத்தில் உள்ள தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது, “போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆனால் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்காதது ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை உருவாகியுள்ளது. இந்த கழகத்திற்கான நிதியை தமிழக பட்ஜெட்டில் அரசு ஒதுக்கவில்லை.

சென்னை பல்கலை மாணவர் சேர்க்கை – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் போக்குவரத்து துறையின் எந்த பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை. எனவே நாளை தமிழகம் முழுவதும் கட்டாயம் போக்குவரத்து கழக ஊழியர்கள் 1 லட்சம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக அரசு மருத்துவமனை ஆய்வக பணியாளர்களுக்கான பதவி உயர்வு – நீதிமன்றம் இடைக்கால தடை!!

இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்காத அளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு டிப்போக்களின் முன்பும் காவலர்கள் நிறுத்தப்பட்டு பேருந்துகள் இயங்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நாளை வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் தரமாட்டாது.

தமிழகத்தில் நாளை முதல் 90% பேருந்துகள் இயங்காது – வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!!

காரணம் தொழிற்சங்க விதிகளின் படி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் போது நோட்டீஸ் கொடுத்து, கால அவகாச இடைவேளைக்கு பிறகுதான் ஈடுபட முடியும். ஆனால் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறாகும்”, இவ்வாறு அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!