தமிழகத்தில் நாளை முதல் 90% பேருந்துகள் இயங்காது – வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்:
தமிழக அரசின் போக்குவரத்து துறை ஊழியர்கள் நீண்ட நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் கேட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய உயர்வு போன்ற பல முக்கிய கோரிக்கைகள் அவர்களின் பட்டியலில் உள்ளது. இதற்காக கடந்த பிப்ரவரி 18ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் நடந்த 14வது ஊதிய உயர்வு பேச்சவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில் நேற்று பிப்ரவரி 22ம் தேதி அன்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழகத்தில் 26 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் – மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு!!
வேலை நிறுத்தம்:
கூட்டத்தின் முடிவில் பிப்ரவரி 25ம் தேதியான நாளை முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அரசு போக்குவரத்து கழகம் மக்களுக்கு சிறப்பான சேவையை அளித்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து, பல்வேறு பிரிவினருக்கான இலவச பயணச் சேவை, கிராமங்களுக்கும் பேருந்து போக்குவரத்து, கொரோனா கால பேருந்து இயக்கம் என மக்களுக்காக சேவை நோக்கத்துடன் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது.
ஆனால் தமிழக அரசு எங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை பட்ஜெட்டில் ஒதுக்குவதில்லை. தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை வைத்து தான் போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது. இதுவரை சுமார் 8,000 கோடி தொழிலாளர்களின் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும் நாளன்று அவர்களுக்கான பலன்கள் வழங்கப்படுவதில்லை என்று கூறியிருந்தனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளதால் 90% பேருந்துகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்