தமிழக அரசு மருத்துவமனை ஆய்வக பணியாளர்களுக்கான பதவி உயர்வு – நீதிமன்றம் இடைக்கால தடை!!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த, நிலை 2 ஆய்வக பணியாளர்களில் 112 பேருக்கு கலந்தாய்வு இல்லாமல் பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆய்வக பணியாளர்களுக்கான கலந்தாய்வு:
தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலை 2-ல் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் லேப் டெக்னீசியன் பணியாளர்களுக்கு விதிப்படி நிலை 1-கான பதவி உயர்வு வழங்க வேண்டும். இந்நிலையில் 112 ஆய்வக பணியாளர்களுக்கு எந்தவித கலந்தாய்வும் நடத்தப்படாமல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால், அதில் பல முறைகேடுகள் நடத்தப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கில் பலர் பணம் கொடுத்து தங்கள் பகுதிகளுக்கு அருகிலேயே பணி பெற்றுள்ளனர் எனவும் இதன் காரணமாக பலரது பணி பறிபோன நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ஷாஜகான் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
44வது மாபெரும் புத்தக கண்காட்சி – சென்னையில் இன்று முதல் தொடக்கம்!!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட ஆய்வக பணியாளர்களுக்கான பதவி உயர்வுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு குறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி இந்த வழக்கை மார்ச் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்