தமிழக பள்ளிகளில் “ஆபரேஷன் இ” திட்டம் – கல்வியாளர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்ய முன்னர் செயல்படுத்தப்பட்ட “ஆபரேஷன் இ” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“ஆபரேஷன் இ” திட்டம்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வழக்கமாக நடத்தப்படும் ஆய்வுகள் தவிர, சிஇஓ முதல் பிஇஓ வரை உள்ள குழு முன்னறிவிப்பு இன்றி பள்ளிகளை ஆய்வு செய்யும் “ஆபரேஷன் இ” திட்டத்தை அப்போது பதவியில் இருந்த சிஇஓ கோபிதாஸ் செயல்படுத்தினார். இந்த திட்டம் மூலமாக பள்ளிகளில் நடத்தப்படும் இறைவணக்கம், ஆசிரியர் வருகை நேரம், மாணவரின் வாசிப்பு திறன், எழுதும் திறன், ஆசிரியர்கள் கற்பித்தல் திறன், ஆசிரியர் பராமரிக்கும் பதிவேடுகள் போன்றவை ஆய்வு செய்யப்படும்.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டத்தின் மூலமாக கிராமத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் வருகை சரியாக இருந்தது. பள்ளி நிர்வாகம் சார்பில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. மேலும் மாணவர்களுக்கு தேர்வுகள் மூலமாக அவர்களின் கல்வி நிலை அறிந்து கொண்டு அதனை மேம்படுத்தப்பட வழிவகை செய்தது.
பிப்ரவரி 27 முதல் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு – ஆசிரியர்கள் எதிர்ப்பு!!
ஆனால் இந்த திட்டம் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதனுக்கு கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்