தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடத்த அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் பள்ளிகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதன்படி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில் அதற்கு முன்பாக தேர்வுகள் நடத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழக காவல்துறையில் 11,741 காலிப்பணியிடங்கள் – மார்ச் 8 உடற்தகுதித் தேர்வு!!
அவர் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகளின் படி ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் பல நாட்களாக தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதனை தற்போது நடைமுறைப்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்