8 வங்கிகளின் பழைய காசோலைகள் செல்லுமா? வங்கி அதிகாரிகள் விளக்கம்!!
கடந்த ஆண்டு முதல் 8 வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. தற்போது இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் இன்று (ஏப்ரல் 1) முதல் செல்லாது என்று தொடர்ந்து தகவல் வெளியானது. தற்போது இது குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்.
வங்கிகள் இணைப்பு:
கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் படி முக்கிய 8 வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன் இணையும் என்று தெரிவித்தது. அதன்படி விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திர வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் தேனா வாங்கி ஆகிய 7 வங்கிகள் பிற பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த வங்கிகள் இணைக்கப்பட்டாலும் வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் பழைய வங்கி கணக்கை தான் பயன்படுத்தி வந்தனர்.
எச்1பி விசா விண்ணப்பதாரர்கள் தேர்வு – அமெரிக்க குடியுரிமை தகவல்!!
ஆனால் பழைய வங்கியின் இணையதளம் மற்றும் செயலியை பயனாளர்களால் பயன்படுத்த முடியாது. பயனாளர்கள் அனைவரும் வங்கிக் கணக்கு மட்டும் மாறாமல் மற்றபடி புதிய கணக்கை துவங்கியது போல் அனைத்து பணிகளையும் செய்தனர். மேலும் இணைக்கப்பட்ட வங்கிகளில் கொடுக்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் இன்று (ஏப்ரல் 1) முதல் செல்லாது என்று தொடர்ந்து தகவல் வெளியானது. தற்போது இதுகுறித்து வங்கி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அவர் கூறியதாவது, வங்கிகளின் இணக்கம் அடித்து முழுமையாக முடிவடைந்தாலும் அதில் சில சிக்கல் ஏற்பட்டு தான் வருகிறது. அதிலும் குறிப்பாக ஆந்திரா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், கார்ப்பரேஷன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் ஆகிய வங்கியின் ஐஜிஎஸ்சி குறியீடுகள் புதிய நிதியாண்டு முதல் மாறும் என்று தெரிவித்தார்.
ஊழியர்களின் சம்பள குறைப்பு இல்லை – புதிய ஊதிய கொள்கை ஒத்திவைப்பு!!
இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பரிவர்த்தனை குறித்து வங்கிகளிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய காசோலைகளை வாடிக்கையாளர்களை பெறுவதற்கு அறிவுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். ஆனாலும் இன்று (ஏப்ரல் 1) முதல் பழைய காசோலைகள் செல்லும். பழைய காசோலைகளின் பயன்பாடு நிறுத்துவதற்கு காலஅவகாசம் கொடுக்கப்படும். மேலும் இன்று (ஏப்ரல் 1) முதல் புதிய ஐபிஎஸ்சி கோடு அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.