ஊழியர்களின் சம்பள குறைப்பு இல்லை – புதிய ஊதிய கொள்கை ஒத்திவைப்பு!!
இன்று (ஏப்ரல் 1) முதல் ஊழியர்களுக்கு டேக் ஹோம் சம்பளம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புதிய ஊதிய விதி ஒத்திவைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் குறையாது.
புதிய ஊதிய விதி:
இன்று முதல் (ஏப்ரல் 1) புதிய நிதி ஆண்டு துவங்குகிறது. இதனால் நாட்டில் காஸ் சிலிண்டர், அத்யாவசிய தேவைகளின் பொருட்கள் ஆகியவற்றையின் விலைகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நேற்று காஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது. மேலும் வங்கிகளின் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமும் குறைக்கப்படும் என்று நேற்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார். ஆனால் இன்று அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எச்1பி விசா விண்ணப்பதாரர்கள் தேர்வு – அமெரிக்க குடியுரிமை தகவல்!!
இன்று முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் சலுகைகள் 50% அதிகமாக இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் பல நிறுவனங்கள் ஊதியத்தை குறைவாக கொடுத்து மற்ற அலவன்சுகளை மிக அதிகமாக கொடுத்து வருகின்றனர். இந்த விதி அமலுக்கு வந்தால் இனி அவையெல்லாம் குறைந்து விடும், அதற்கு பதில் சம்பளம் அதிகரிக்கும். மேலும் அடிப்படை சம்பளத்துடன் CTC அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனர்.
TN Job “FB Group” Join Now
புதிய விதி அமலுக்கு வந்தால் சம்பளமும் அதிகரிக்கும் அதனுடன் பிஎப் செலுத்துவதும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய விதி நடப்பு நிதியாண்டின் முதல் நாளான இன்று முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை பழைய முறையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
My basic pay 26300.00 RS sorting assistent in postal madurai DA colculet