எச்1பி விசா விண்ணப்பதாரர்கள் தேர்வு – அமெரிக்க குடியுரிமை தகவல்!!
அமெரிக்காவிற்கு சென்று தங்கி பணிபுரிவதற்காக எச்1பி விசா வழங்கப்படும். தற்போது 2022ம் ஆண்டிற்கு எச்1பி விசா வழங்குவதற்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை அமெரிக்க குடியுரிமை தெரிவித்துள்ளது.
எச்1பி விசா:
அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுவது தான் எச்1பி விசா. இதன் மூலம் இந்திய மற்றும் சீன மக்கள் தான் அதிகம் பயனடைந்து வந்தனர். ஆண்டுக்கு 85 ஆயிரம் பேருக்கு எச்1பி விசா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்காக 2.25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பிப்பார்கள். ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் அமெரிக்க நாட்டில் உயிர் சேதம் மற்றும் பொருளாதார சேதம் மிக அதிகமாக ஏற்பட்டது.
சேமிப்பு திட்டங்களின் வட்டி குறைப்பு வாபஸ் – மத்திய அமைச்சர் அறிவிப்பு
மேலும் அந்த நாட்டில் பல தரப்பு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நின்றனர். இதனை சரிசெய்வதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓர் அதிரடியான திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் எச்1பி விசா இந்திய மற்றும் சீன நாட்டு மக்கள் அதிகமாக பெறுவதற்கு சிக்கல் எழுந்தது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்ற புதிய அதிபர் ஜோ பைடன் இதனை மாற்றி அமைத்தார்.
TN Job “FB Group” Join Now
இதனால் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் முன்பு போல் இனியும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார் பைடன். இந்நிலையில் எச்1பி விசாவிற்கான விண்ணப்பங்கள் மின்னணு முறையில் பெறப்பட்டது. அதற்கான குலுக்கல் முறையும் முடிந்து விண்ணப்பதாரர்களை தற்போது தேர்வும் செய்துள்ளனர். மேலும் இந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் வருகிற 2022ம் நிதியாண்டிற்கான தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் தெரிவித்தது.