இந்தியாவில் கடந்த ஆண்டு 75 லட்சம் பேர் வேலையிழப்பு – முழு ஊரடங்கு எதிரொலி!!
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கடந்த ஆண்டு 75 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என ஆய்வு தகவல் கூறுகிறது.
வேலை இழப்பு
இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு பேரதிர்வாக உருவான கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கின் போது அரசுக்கும், தனி மனிதர்கள் என ஒவ்வொருவருக்கும் பல நெருக்கடிகள் ஏற்பட்டது. தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் தங்களது வேலையை இழந்தனர். தினக்கூலிகளின் குடும்பங்கள் வறுமையில் வாடியது.
தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம் – அதிகரிக்கும் வெயில்!!
அரசுக்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலை மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பெரும் சவாலாக காணப்பட்டது. ஒரு வழியாக ஊரடங்கின் பலனாக கொரோனா தாக்கம் குறைக்கப்பட்டது என்பது உண்மை தான். இந்நிலையில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமானமாக 75 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என ஒரு ஆய்வு தகவல் கூறுகிறது.
சிஎம்ஐஇ எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு இது குறித்து தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் வேலையின்மை விகிதம் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நகர் புறங்களில் வேலை வாய்ப்பின்மை அளவு 9.78% ஆகவும் கிராமப்புறங்களில் இது 7.13% ஆகவும் இருந்ததாக சிஎம்ஐஇ ஆய்வு கூறுகிறது. இருந்தாலும் கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தின் போது இருந்த மோசமான நிலை இப்போது இல்லை எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்