தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம் – அதிகரிக்கும் வெயில்!!
தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. மே மாதம் 28 ஆம் தேதி வரை இதன் தாக்கம் இருக்கும் எனவும் இதனால் வழக்கத்தை விட அதிகமாக வெயில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திரி வெயில் தொடக்கம்:
தமிழகத்தில் ஏப்ரல் , மே மாதங்களில் கோடை காலம் தொடங்கிவிடும். அதன் பின்னர் மே மாதம் தொடக்கத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிவிடும் அது 25 நாட்களுக்கு இருந்து மக்களை வாட்டி வதைக்கும். தமிழகம் முழுவதும் சாதாரண வெப்பநிலை விட அக்னி நட்சத்திரம் அன்று 100 டிகிரி மேல் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்கிவிட்டது. அதனால் தமிழகத்தில், சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாகி உள்ளது. இன்று முதல் தொடங்கிய அக்னி நட்சத்திரம் மே 29 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு இருக்கும்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான புதிய அறிவிப்பு – அரசு வெளியீடு!!
கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்தனர். அதனால் வெயில் தாக்கத்தில் இருந்து சற்று நிம்மதி அடைந்தனர். தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் சற்று குறைவாக மட்டுமே உள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 20,952 பேருக்கு கொரோனா – 122 பேர் உயிரிழப்பு!!
மேலும் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருவதால் வெயிலில் இருந்து சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மக்கள் வெயிலை தணிக்க அதிகமாக பழங்கள், நீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், அதிகமாக தண்ணீர் பருக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.