தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் 72 மாத அகவிலைப்படி நிலுவை – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களின் நிலுவையில் உள்ள 72 மாத அகவிலைப்படி உயர்வை வழங்குமாறு போக்குவரத்து தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பெரும்பாலானோர் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒன்று தான் அரசு போக்குவரத்து துறை. அனைத்து அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டுப்படி, ஓய்வூதியம், போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அகவிலைப்படியானது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு உயர்த்தப்படும்.
SBI வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு – ஹால் டிக்கெட் வெளியீடு! முழு விவரம் இதோ!
இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் வழங்குதல், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்குமாறு அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு வழங்குவதாக கூறிய அகவிலைப்படி உயர்வு 72 மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. அந்த நிலுவை தொகையை வழங்குமாறு தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை (நவ.12) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஆனாலும் இன்னும் வழங்கப்படவில்லை. இது குறித்து போக்குவரத்து தொழிலாளர் எச்.எம்.எஸ் சங்கம் மதுரை மாவட்ட ஆலோசகர் அங்குசாமி மாநில அளவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 72 மாதங்கள் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டியது பல மாதங்களாகவே நிலுவையில் உள்ளது. இந்த தொகையை மொத்தமாக அரசு வழங்க இயலாத நிலையில் 10 மாதங்கள் வீதம் 7 மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 14வது சம்பள நிர்ணய ஒப்பந்தம் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.