தமிழகத்தில் நாளை (நவ.12) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மையத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வேலை தேடுபவர்கள் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கடந்த வருடம் முதல் தற்போது வரை பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கியது. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து தவித்தனர். அன்றாடம் வேலை பார்த்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் தினக்கூலிகள் கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் அரசு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு ஓரளவு தொற்று பரவல் குறைய ஆரம்பித்ததும் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது கட்டுப்பாடுகளை திருப்ப பெற்றது.
தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – உத்தரவை மீறும் தனியார் கல்வி நிறுவனங்கள்!
இதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (12. 11.2021) ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை: கிடுகிடுவென உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்! நகைப்பிரியர்கள் ஷாக்!
இந்த முகாமில் பல்வேறு தனியார் துறைகள் பங்கேற்க உள்ளனர். 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித்தகுதிகள் பெற்றோர் இந்த முகாமில் பங்கேற்கலாம். நேர்காணலுக்கு வருவோர் தங்களின் சுயவிவரக்குறிப்பு, புகைப்படம், கல்வித் தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை, ஆகிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.