சென்னை: கிடுகிடுவென உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்! நகைப்பிரியர்கள் ஷாக்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 528 உயர்ந்து தற்போது ஒரு சவரன் ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை உயர்வினால் நகைப்பிரியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
தங்க நகைகள் இந்திய முதலீட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. நடுத்தர குடும்பம் முதல் வசதி படைத்தவர்கள் வரை முதலீட்டில் அவர்களின் முதல் எண்ணம் தங்கமாக தான் உள்ளது. சர்வதேச வணிக சந்தையில் தங்கத்தின் விலையை பொறுத்து இந்திய சந்தையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலை மற்றும் மாலை என்று ஒரு நாளில் இரு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் எதிரொலியாக இந்திய வணிக சந்தையில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
CBSE 10 & 12ம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் – OMR தாள் குறித்து கவனிக்க வேண்டியவை!
கடந்த வாரத்தில் நாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் தங்க நகைகளை வாங்க ஆர்வமுடன் இருந்திருப்பார்கள். ஆனால் பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை அதிகரித்திருந்தது. பண்டிகை முடிந்த பின்னர், விலை ஏற்றத்தில் சரிவு இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போதும் உச்சத்தில் உள்ளது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரித்து, சவரன் ரூ.36,432-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.69.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் நாளை (நவ.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இன்று காலை நேர நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.528 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 காசு உயர்ந்து ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்க, வெள்ளி நகை நகைகளின் அதிகபட்ச விலை உயர்வினால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.