தமிழகத்தில் புதிதாக 7 நகராட்சிகள் உருவாக்கப்படும்…!! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!!
தமிழகத்தில் தற்போது மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில், சட்டசபையில் சமீபத்தில் நடைபெற்ற துறைரீதியான விவாதத்தில் தமிழகத்தில் புதிதாக நகராட்சிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் கே. என். நேரு அறிவித்தார். தற்போது அது தொடர்பாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஏடிஎம் சேவை கட்டணத்தை உயர்த்திய ஆர்பிஐ…!! காட்டமாக விமர்சித்த முதல்வர்…!!
அதாவது, போளூர், கன்னியாகுமரி, அவினாசி,செங்கம், கோத்தகிரி, சங்ககிரி, பெருந்துறை என 7 நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி மாதம் 13 நகராட்சிகள் மற்றும் 25 பேரூராட்சிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.



























