தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 7 பேர் கொண்ட குழு – வனவிலங்குகள் பாதுகாப்பு!
தமிழகத்தில் வன விலங்குகளை பாதுகாக்க மாநில அளவில் தமிழக அரசு 7 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு:
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். ஒவ்வொரு துறைகளையும் கண்காணிக்க குழுக்களை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் உத்தவிட்டு வருகிறார். இந்த பெருந்தொற்று காலத்தில் திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து கலந்தாலோசனைகளை நடத்தி புதிய முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அரசின் சீரிய முயற்சியால் கொரோனா தொற்று 35,000 என்ற எண்ணிக்கையில் இருந்து 10,000 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் 513 மாவட்டங்களில் 5%க்கு கீழ் குறைந்த கொரோனா – மத்திய சுகாதாரத்துறை!
மேலும் ஸ்டாலின் தலைமையிலான அரசு மனிதர்களை மட்டுமல்லாது, விலங்குகளையும் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்ககளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த போது முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். எதிர்பாராத வகையில் பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்து விட்டது. அதனால் தொடர்ந்து மற்ற சிங்கங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். சிங்கங்களை தொடர்ந்து மற்ற விலங்குகளும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது தமிழகத்தில் வன விலங்குகளை பாதுகாக்க மாநில அளவில் தமிழக 7 பேர் அடங்கிய பணிக்குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழு வன விலங்குகளை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. விலங்குகளிடம் நோய் பரவலை கண்டறிதல், விலங்குகளை தனிமைப்படுத்துதல், விலங்குகளுக்கு தடுப்பூசிகள் செலுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு நோய் பரவாமல் தடுப்பதையே முக்கிய பணியாக கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.