நாடு முழுவதும் 513 மாவட்டங்களில் 5%க்கு கீழ் குறைந்த கொரோனா – மத்திய சுகாதாரத்துறை!
இந்தியாவில் 513 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 %க்கு கீழ் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. நாடெங்கும் உயிரிழப்புகள் தினசரி புதிய உச்சத்தை எட்டியது. உலக அளவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டது. நாள் ஒன்றுக்கு பாதிப்பு 4 லட்சமாக இருந்து. பலி எண்ணிக்கை 4000 ஆக இருந்தது. அதன் பிறகு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு – சுகாதார நிபுணர்கள் கருத்து!
இந்த கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணியை அனைத்து மாநில அரசுகளும் விரைவுபடுத்தி வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோர் அதிகமாக தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். மேலும் ஊரடங்குகளும் தொடர்ந்து அமலில் இருந்தது. இதன் விளைவாக தொற்று பரவல் குறைந்துள்ளது. அதனால் ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் 513 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீள்பவர்களின் விகிதம் 96% ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளின் தொற்று எண்ணிக்கையும் 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது . தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 75 முதல் 80 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், அவர்களின் நிலை மோசமாகவில்லை. 18 வயதுக்கு மேற்பட்டவர்களும், கீழ் உள்ளவர்களுக்கும் ஒரே அளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. கொரோனா மூன்றாம் அலை வரும் என எச்சரிக்கின்றனர். அதற்கும் அரசு தயாராக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.