PF உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை பதிவு – இதைச் செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் வரை நஷ்டம்!

0
PF உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை பதிவு - இதைச் செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் வரை நஷ்டம்!
PF உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை பதிவு - இதைச் செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் வரை நஷ்டம்!
PF உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை பதிவு – இதைச் செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் வரை நஷ்டம்!

PF சந்தாதாரர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பிஎஃப் விதிமுறைகளில் மிக முக்கியமான மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின் படி வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அந்த வேலையை செய்யாவிட்டால் ரூ7 லட்சம் வரை இழப்பீடு ஏற்படும் என்று குறிப்பிட்டு உள்ளது

எச்சரிக்கை பதிவு:

PF திட்டம் ஊழியர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த பிடித்த தொகை PF கணக்கில் மாத மாதம் செலுத்தப்படும். இந்த தொகை ஊழியர் பணி ஓய்வு பெற்ற பிறகு மொத்தமான தொகையாகவோ அல்லது மாதம் பென்ஷன் தொகையாகவோ வழங்கப்படும். தற்போது ஏகப்பட்ட சலுகைகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட் தகவலை EPFO அமைப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஸ்மார்ட் கார்டு சேவைகள்! முழு விவரம்!

PF கணக்கு வாடிக்கையாளர்கள் அவரது கணக்கில் நாமினி பெயரைச் சேர்ப்பது கட்டாயம் என EPFO அமைப்பு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இதன் மூலம் குடும்பம் அல்லது நாமினிக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யலாம். மேலும் UAN மூலம் ஆன்லைனில் இ-நாமினேஷனை தாக்கல் செய்யலாம். பிஎஃப் உறுப்பினர்களுக்கு தொழிலாளர் டெபாசிட் இணைப்பு காப்பீட்டு திட்டத்தின் (EDLI) கீழ் குறைந்த பட்சம் 2.5 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது என்பது குறிப்பிட வேண்டியவை. ஒருவேளை பிஎஃப் உறுப்பினருக்கு ஏதேனும் ஏற்பட்டு விட்டால் அவரது பிஎஃப் பலன்கள் அனைத்தும் அந்த நாமினிக்கு தான் சென்றடையும்.

இந்தப் பிஎஃப் பணம் உறுப்பினரின் நாமினிக்கு வழங்கப்படுகிறது.எனவே நாமினி பெயரை பிஎஃப் கணக்கில் இணைப்பது மிக அவசியம் ஆகும். ஒரு வேளை பிஎஃப் உறுப்பினர் நாமினி பெயரை கணக்குடன் இணைக்காமல் விட்டால் ரூ.7 லட்சம் வரையிலான காப்பீடு கிடைக்காது. மேலும் பிஎஃப் கணக்கில் உள்ள பேலன்ஸ் எவ்வளவு என்று பார்ப்பதற்கும் நாமினி பெயரை இணைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பேலன்ஸ் பார்க்க முடியாது என்ற விதிமுறையும் அமலில் உள்ளன. எனவே வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் நாமினியை கணக்குடன் இணைக்க வேண்டும்.

PF கணக்குகளுக்கு இ-நாமினேஷனை தாக்கல் செய்ய , EPF உறுப்பினர்கள் www.epfindia.gov.in ஐப் பார்வையிட வேண்டும்.

நீங்கள் ‘சேவைகள்’ பிரிவு மற்றும் ‘ஊழியர்கள்’ வகைக்கு செல்ல வேண்டும்.

இறுதியாக, நீங்கள் – உறுப்பினர் UAN/ஆன்லைன் சேவைக்குச் செல்ல வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!