தமிழகத்தில் இனி அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
இலவச பயணம்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கட்டமாக 5 வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம் கோப்புகளில் கையெழுத்திட்டு திட்டமாக அமல்படுத்தினார். அதில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திட்டங்களில் ஒன்று அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம். இதன் மூலம் தற்போது தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
PF உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை பதிவு – இதைச் செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் வரை நஷ்டம்!
முன்பெல்லாம் பெண்கள் அதிகம் ஆட்டோக்களில் பயணம் செய்வர். தற்போது எவ்வளவு நேரம் ஆனாலும் பேருந்துக்காக காத்திருந்து பயணம் செய்கின்றனர். இந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. மேலும் ஒரு பக்கம் இத்திட்டத்தால் போக்குவரத்து துறை பெரும் சரிவையும் சந்தித்தது. இதற்கான செலவினத்தை அரசு பொறுப்பேற்று கொண்டு மாதந்தோறும் செலவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நகர் பேருந்துகள் மட்டுமில்லாது அனைத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர், மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு 40 சதவீதம் என்று அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது 61.82 சதவீதம் என அதிகரித்துள்ளது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்பது, முதல்வரின் கனவுத்திட்டம். கடந்தாண்டு ரூ.1,380 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.1,510 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் போக்குவரத்து துறை ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்தால் எப்படி போக்குவரத்துக் கழகத்தை நடத்துவது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.