மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு – ஏப்ரல் மாதம் முதல் அமல்!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 8% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதனால் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.
அகவிலைப்படி உயர்வு
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதிச்சுமையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதில் குறிப்பாக கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பான தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை முடிவில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
PF உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை பதிவு – இதைச் செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் வரை நஷ்டம்!
மேலும் பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக மத்தியப் பிரதேச ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் 8% சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அம்மாநில ஊழியர்களுக்கு 20 சதவீத அகவிலைப்படியை பெற்று வந்தனர். இந்த நிலையில் கொரோனா கால கட்டத்தில் வழங்கப்படாமல் இருந்த அகவிலைப்படி உயர்வை தற்போது வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதில் தெரிவித்தாவது, தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்த சூழ்நிலையில் அரசு ஊழியர்களுக்கு 11 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீத அகவிலைப்படியை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இதனை ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் மாநிலத்தில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.