நாகசைதன்யாவுடன் உறவை முழுவதும் முறித்துக் கொண்ட சமந்தா – ரசிகர்கள் அதிர்ச்சி!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து குறித்தான பதிவை சமந்தா நீக்கியதால் இருவரும் சேரப் போகிறார்கள் என நினைத்த சமயத்தில் நாக சைதன்யாவை unfollow செய்து சமந்தா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சமந்தா மற்றும் நாக சைதன்யா:
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வரும் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் கூட இருவரும் சிறந்த காதலர்களாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். ஆனால் யாருமே எதிர்ப்பாராத நேரத்தில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர். இவர்களின் விவாகரத்து மக்களின் மத்தியில் மிக பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் வீட்டிற்கே சென்ற ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!
விவகாரத்தை அறிவித்த பிறகும் கூட இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து குறித்தான பதிவை நீக்கினார். இதனால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்களா என சந்தேகம் எழுந்தது. இதற்கு பிறகு நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் மற்றும் நாக சைதன்யாவை பாலவ் செய்வதையும் சமந்தா நிறுத்திவிட்டார்.
சமந்தா இப்படி செய்த நிலையில் கூட சமந்தாவுடன் எடுத்துக்கொண்ட எந்த புகைப்படத்தையும் நாக சைதன்யா நீக்கவில்லை மற்றும் தொடர்ந்து சமந்தாவை பாலவ் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த ஒரு பேட்டி ஒன்றில் கூட சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே போதும் என நாக சைதன்யா கூறினார். இருவருமே இன்னும் இந்த விவாகரத்து தாக்கத்தில் இருந்து மீண்டு வரவில்லை. நாக சைதன்யாவை பாலவ் செய்வதையும் சமந்தா நிறுத்தியது குறித்து தற்போது பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. இதுக்குமேல் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.