தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50000 – நிதி ஒதுக்கீடு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிதி நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றனர். அதனால் அரசு அவர்களுக்கு உதவிபுரியும் வகையில் கருணைத் தொகையை வழங்கி வருகிறது. இது குறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருணைத் தொகை
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் பொருளாதார பாதிப்பை தடுக்க நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு அவர்களுக்கு உதவிபுரியும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கருணைத் தொகையை அரசு வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை அரசின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,671 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? ஓமிக்ரான் பரவல் எதிரொலி! வைரலாகும் மீம்ஸ்கள்!
அதில் 20934 குடும்பங்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த குடும்பங்களுக்கு கருணைத்தொகையாக ரூ.104.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரது குடும்பங்களுக்கு ரூ.50000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 பேருக்கு இந்த கருணைத் தொகையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மேலும் கொரோனா பெருந்தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் நிலை மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
இந்தியாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியல் – ஓமிக்ரான் அச்சம்!
அரசு இந்த குழந்தைகளின் நலன் கருதி கருணை தொகையாக ரூ.5 லட்சம் வரை வழங்கி வருகிறது. அதையடுத்து பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வரை வழங்கி வருகிறது. இதற்காக ரூ.207 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் முன்களப் பணியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை தொகையை வழங்கி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 375 முன்களப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு கருணைத் தொகை பற்றிய தகவல்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.