இந்தியாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியல் – ஓமிக்ரான் அச்சம்!

0
இந்தியாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியல் - ஓமிக்ரான் அச்சம்!
இந்தியாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியல் - ஓமிக்ரான் அச்சம்!
இந்தியாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியல் – ஓமிக்ரான் அச்சம்!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஒமிக்ரான் மாறுபாடு பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் இரவு ஊரடங்கு உத்தரவு, 144 தடை போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ள ஒமிக்ரான் வைரஸ் தொற்று இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அதிகளவு பரவும் தன்மை கொண்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் ஒவ்வொரு நாளும் இரட்டிப்பு மடங்காக புதிய பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் ஒமிக்ரான் மாறுபாட்டின் புதிய வழக்குகள் முன்னோக்கி வருவதால், பல மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

அதே நேரத்தில் 3ம் அலையை உருவாக்க கூடியதாக கருத்தப்படும் இந்த ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பண்டிகை காலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஒமிக்ரான் வழக்குகளை பதிவு செய்துள்ள மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் இரவு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. இப்போது ஒமிக்ரான் எழுச்சிக்கு மத்தியில் இரவு ஊரடங்கு உத்தரவை விதித்த மாநிலங்களின் முழு பட்டியலையும் காணலாம்.

டெல்லி:

கொரோனா புதிய வழக்குகளின் அதிகரிப்புக்கு மத்தியில், டிசம்பர் 27 முதல் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க டெல்லி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை தினசரி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும்.

மகாராஷ்டிரா:

அதிக எண்ணிக்கையிலான ஒமிக்ரான் வழக்குகளை பதிவு செய்து வரும் மகாராஷ்டிரா மாநில அரசு தினசரி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஐந்து பேருக்கு மேல் கூடுவதை தடைசெய்து ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.

கர்நாடகா:

கர்நாடகாவில் டிசம்பர் 28 முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. அதற்கான கட்டுப்பாட்டு நேரங்கள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கு உத்தரவானது அடுத்த 10 நாட்களுக்கு நீடிக்கும்.

உத்தரப்பிரதேசம்:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி முதல் மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்த இரவு ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செயல்படுத்தப்படும்.

நாளை (டிச.28) முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – மாநில அரசு அதிரடி உத்தரவு!

அசாம்:

முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அசாம் மாநில அரசு, இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இம்மாநிலத்தில் ஒமிக்ரான் வழக்கு எதுவும் இல்லாத போதிலும், இரவு 11:30 முதல் காலை 6 மணி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஹரியானா:

ஹரியானாவில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 25 முதல் ஜனவரி 5 வரை அமலில் இருக்கும்.

மத்திய பிரதேசம்:

மத்தியப் பிரதேச அரசு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

குஜராத்:

குஜராத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு உத்தரவு அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, ஜூனாகத், ஜாம்நகர், பாவ்நகர் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட 8 நகரங்களில் இரண்டு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஊரடங்கிற்கான புதிய நேரம் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!