தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? ஓமிக்ரான் பரவல் எதிரொலி! வைரலாகும் மீம்ஸ்கள்!
தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளை மூட மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதையடுத்து பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் வெகு நாட்களுக்கு பிறகு தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்று வேகமெடுத்து பரவுகிறது. இந்த தொற்று பரவல் மூன்றாம் அலையாக இருக்குமோ அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஏற்கனவே மூன்றாம் அலை கொரோனா குழந்தைகளை தாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில் தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியல் – ஓமிக்ரான் அச்சம்!
தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு ஓமிக்ரான் பரவி வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் தடுப்பூசிகள் இன்னும் செலுத்தப்படவில்லை இந்த நிலையில் சமீப காலமாக மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஜனவரி 3 முதல் பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் இன்றி முழுமையாக தினசரி வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகளை மூட வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
அதனால் மீண்டும் விடுமுறை விடப்படும் என்று மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இது குறித்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது. பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளில் ஆன்லைனில் தேர்வுகள் மற்றும் பாடங்களை நடத்துவது குறித்து தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் பரிசீலித்து முடிவெடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளே தொடரும் நிலை ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளிகளில் தற்போது தான் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் நடப்பாண்டு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் பள்ளிகளை மூடினால் கல்வி நிலை பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது.