5 லட்ச ரூபாய்க்கு இலவச மருத்துவ காப்பீடு..!! அரசின் அசத்தல் திட்டம் அடுத்த வாரம் தொடக்கம்..!!
இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பதற்காக கடந்த 2018ம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 5 லட்ச ரூபாய்க்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, இந்த புதிய திட்டத்தை அடுத்த வாரம் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


























