48,500 ஆண்டு கால பழைமையான ‘சோம்பி வைரஸ்’ – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!
தற்போது புது புது வைரஸ்கள் பரவி மக்கள் மத்தியில் நோய் தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மிகவும் பழைமையான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
சோம்பி வைரஸ்:
ரஷ்யாவின் யுகேச்சி அலாஸ் ஏரி என்ற ஏரியின் அடியில் மிகவும் பழைமையான அதாவது 48,500 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டோரா வைரஸ் ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த இந்த வைரஸ் தற்போது நிரந்தர பனி உருக்கம் போன்றவற்றால் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
இந்த வைரஸானது சைபீரிய ஓநாய்களின் குடல் பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் அபாயமான இந்த வைரஸிற்கு சோம்பி வைரஸ் என்று ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய இந்த வைரஸின் எழுச்சியானது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.மேலும், பாதிப்பு காலம், தொற்று பரவும் விகிதம் குறித்த விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.