தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வந்துள்ளனர். அந்த வகையில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு எப்போது தொடங்குகிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அரையாண்டு தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. அதன் காரணமாக அரையாண்டு காலாண்டு தேர்வுகள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த கல்வியாண்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு எப்போது தொடங்க இருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
அதன் படி 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் 6 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையும் தேர்வு நடைபெறும்.
மேலும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.