மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.9,000 ஹைக் – கூடிய விரைவில் அறிவிப்பு!!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.9,000 ஹைக் - கூடிய விரைவில் அறிவிப்பு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்திற்கு முன்பாகவே வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவீதத்தின் அடிப்படையில் அகவிலைப்படிக்கான பலனை பெற்று வரும் நிலையில் மீண்டும் 4% உயர்வு வழங்கப்பட்டு 50%வழங்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 1,2024 முதல் நான்கு சதவீதமாக DA உயர்வு வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படிக்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் கூடுதலாக ரூ. 9000 சம்பளம் பெறுவார்கள். அதாவது, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 18000 பெறும் ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ. 9000 வழங்கப்பட்டால் அடிப்படை சம்பளமாக ரூ. 27 ஆயிரம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

Paytm வங்கியில் இருந்து உடனே பணத்தை மாற்றுங்க – RBI எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!