ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதன் காரணமாக பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.
பேடிஎம் வங்கி:
நாட்டின் சிறந்த பணமாற்ற தளமாக Phonepay, Gpay, Paytm உள்ளிட்ட தளங்கள் விளங்கி வருகிறது. அதாவது, இந்த செயலியின் மூலமாகவே எந்தவித இடையூறும் இல்லாமல் எளிமையாக பணமாற்றம் செய்து கொள்ளலாம். ஆனால், தற்போது வரும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியின் மூலமாக பண பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாது என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது. அதாவது, சரியான அடையாள ஆவணங்கள் இல்லாமல் ஆயிரம் கணக்கான கணக்குகளை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உருவாக்கியதன் காரணமாக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அப்டேட் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!
இது மட்டுமல்லாமல் பேடிஎம் வங்கி உருவாக்கிய கணக்குகள் பலவும் போலியானவை எனவும், அந்த கணக்குகளை வைத்து பண மோசடிகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே, தற்போது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் பணத்தை சேமித்து வைத்திருப்பவர்கள் உடனடியாக பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் அதனை வேறு வங்கிக்கு மாற்றம் செய்து கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு வங்கி மூலமாக எந்த பயனர்களும் எந்த கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது எனவும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.