தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பா…?? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில், “இன்று முதல் வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி வரை இந்த வறண்ட வானிலையே நிகழும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், “இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பநிலை பதிவாகும்” என்றும் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு இனி புது ரூல்ஸ்…தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு
ஆனால், “வருகின்ற மார்ச் 10, 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்” தெரிவித்துள்ளது. மேலும், “சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டதுடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், காலை நேரங்களில் பனி மூட்டத்துடன் காணப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.



























