
மக்களின் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளை (02-03-2025) மின்தடையா..? மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில், காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு மக்களை எச்சரித்து வருகிறது.
Today Gold Rate: தொடர்ந்து சரிவை நோக்கி தங்கம் விலை…!! இன்னைக்கு கோல்ட் ரேட் எவ்ளோ தெரியுமா…??
இவ்வாறு வெளியிடப்படும் எச்சரிக்கை அட்டவணையில் தமிழகத்தில் நாளை அதாவது மார்ச் 2 ஆம் தேதிக்கான மின்தடை குறித்த எந்த விவரங்களையும் மின்வாரியம் குறிப்பிடவில்லை. இதனால் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று மின்தடை நிகழுமா அல்லது நிகழதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


























