29 சமூகநீதி பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்வு

0

29 சமூகநீதி பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்வு

தமிழகத்தில் மாணவர்களின் உயர்கல்வி தேவையை கருத்தில் கொண்டு, குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 29 சமூகநீதி பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன என அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூகநீதி பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,400-ல் இருந்து ரூ.1,800 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான விடுதி வசதிகளை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!