டெல்லியில் நடைபெறவுள்ள G – 20 மாநாடு – ஏற்பாடுகள் தீவிரம்..207 ரயில்கள் ரத்து!

0
டெல்லியில் நடைபெறவுள்ள G - 20 மாநாடு - ஏற்பாடுகள் தீவிரம்..207 ரயில்கள் ரத்து!
டெல்லியில் நடைபெறவுள்ள G - 20 மாநாடு - ஏற்பாடுகள் தீவிரம்..207 ரயில்கள் ரத்து!
டெல்லியில் நடைபெறவுள்ள G – 20 மாநாடு – ஏற்பாடுகள் தீவிரம்..207 ரயில்கள் ரத்து!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 ,10,11 ஆகிய 3 நாட்கள் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து:

நடப்பு ஆண்டு இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செப். 9,10,11 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் படுத்தப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி – மருத்துவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்!

அந்த வகையில் டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தரும் 80 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக செப். 9,10 ஆகிய தேதிகளில் சுமார் 207 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இயக்கப்படும் 36 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!