10ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவ தேர்வுகள் மூலம் மதிப்பீடு – பள்ளிக் கல்வித்துறை திட்டம்!!
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. மேலும், நடப்பு கல்வி ஆண்டு வழக்கம் போல் அல்லாமல் ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு – புதிய அறிவிப்பு!!
இந்நிலையில், ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களால் ஆன்லைன் முறை பாடத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. இதனால் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு 9, 10, 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.
பருவத்தேர்வுகள்:
பொதுத்தேர்வுகளை ரத்து செய்ததால் 10ம் வகுப்பு மாணவர்களை 11ம் வகுப்பு அல்லது பாலிடெக்னிக் சேர்க்கை நடத்துவதில் சிரமங்கள் இருந்தது. இதனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட வாரியாக பருவத்தேர்வுகளை நடத்தி அந்த மதிப்பெண்களின் மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வும் நடத்தப்பட உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்