பிஎப் திட்ட புதிய உறுப்பினர்களுக்கு 8.5% வட்டி இல்லை – EPFO அறிவிப்பு!!
தொழிலாளர் நல நிதியத்தில் (இபிஎப்) தாமாக முன்வந்து உறுப்பினராக சேரும் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் வட்டி விகிதம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு 7% வட்டி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நல நிதியம்:
தேசிய ஓய்வூதிய திட்டத்தை போல சுய தொழில் புரியும் தொழிலாளர்கள் தொழிலாளர் நல நிதியத்தில் (இபிஎப்) உறுப்பினராக சேரலாம். இவர்களுக்கு சேமிப்பை தொடர்வதற்கு வசதியாக தனி பிரத்யேக கணக்கு தொடங்கப்படும். அவர்களுக்கு சேரும் தொகை மூலமாக பணப்பலன் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
2021 ஆம் ஆண்டு முதல் இபிஎப் வட்டி விகிதம் 8.5 சதவிகிதம் வழங்கப்படுகிறது. அதில் தாமாக முன்வந்து உறுப்பினராக சேருபவர்களுக்கு அதே வட்டி விகிதம் தரப்பட மாட்டாது. அவர்களுக்கு 7 சதவிகித வட்டி விகிதம் மட்டுமே வழங்கப்படும். மேலும் அவர்களது கணக்குகள் தனியாக பராமரிக்கப்படும். புதிய நிதி தொடர்பான இந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய IFSC எண் – மார்ச் 31 கடைசி நாள்!!
மேலும் முறைசாரா தொழிலில் ஈடுபடும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் தனி நிதியத்தை உருவாக்கி செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை – கொரோனா எதிரொலி!!
நாட்டில் உள்ள 50 கோடி தொழிலாளர்களில் 10 சதவிகித பணியாளர்கள் மட்டுமே முறைசாரா பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மற்றவர்களுக்கு சமூக பாதுகாப்பு எதுவும் கிடைப்பதில்லை. எனவே அதனை கருத்தில் கொண்டு தனி நிதியம் அமைத்து அதன் மூலமாக அனைவரும் சேமிக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.