தமிழகத்தில் பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் – உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!
நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது
ரூபாய் நோட்டுகள்:
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக மக்களின் வசதிக்காக ஒரு சில பொது இடங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்ற சில வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது அரசு பேருந்துகள், டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற செப் 30 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்றோ அல்லது இது போல பொது இடங்களிலோ ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download