இந்தியர்களின் 20 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம் – ஒரே மாதத்தில் அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் மே 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை 20 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கை வெளியீடு:
இந்தியாவில் 50 லட்சத்திற்கு அதிகமான பயனர்களை கொண்ட சமூக ஊடகங்கள் அனைத்தும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி, மாதம் தோறும் அறிக்கை வெளியிட வேண்டும். வாட்ஸ்அப் நிறுவனத்தின் மற்ற தளங்களான பேஸ்புக், மைக்ரோ பிளாக்கிங் நிறுவனமான ட்விட்டர் மற்றும் தேடல் நிறுவனமான கூகிள் அனைத்தும் இந்த மாத தொடக்கத்தில் தனது அறிக்கைகளை வெளியிட்டது.
தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
ட்விட்டர் நிறுவனம் தனது உலகளாவிய வெளிப்படைத்தன்மை அறிக்கையையும் வெளியிட்டது, ஜூலை-டிசம்பர் 2020 காலகட்டத்தில் நாட்டின் 25% அளவிலான அனைத்து தகவல்களையும் பெற்றது என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து வாட்ஸ்ஆப் தனது அறிக்கையில், மே 15 முதல் ஜூன் 15 வரை தளத்தின் சேவைகளை தவறாக பயன்படுத்தியதற்காக வாட்ஸ்அப் 20 லட்சம் இந்திய கணக்குகளை தடை செய்துள்ளதாக இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் வெளியிடப்பட்ட முதல் ஒப்புதல் அறிக்கையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், ஒவ்வொரு 30-45 நாட்களுக்கும் இந்த அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் குறை தீர்க்கும் அதிகாரி குறிப்பிட்ட காலகட்டத்தில் மொத்தம் 345 கோரிக்கைகளைப் பெற்றுள்ளார். அதில், கணக்கு தடை செய்யப்பட்டதற்கு முறையிட்டு 202 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.