அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அகில இந்தியப் பணி அலுவலர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணம் 2%உயர்த்தப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
2% அகவிலைப்படி உயர்வு:
கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் அவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DR) 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் அதே விகிதத்தில் DR பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் 2024-25 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த திரு.பாலகோபால், ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம்/ஓய்வூதியத்துடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு தவணை DA/DR வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும் நீதித்துறை அதிகாரிகளின் DA மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் DR 38% லிருந்து 46% ஆக உயரும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணி அதிகாரிகளின் டிஏ தற்போதைய 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. அதே போல் இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.