அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு – வெளியான மாஸ் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - வெளியான மாஸ் அறிவிப்பு!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அகில இந்தியப் பணி அலுவலர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணம் 2%உயர்த்தப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

2% அகவிலைப்படி உயர்வு:

கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் அவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DR) 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் அதே விகிதத்தில் DR பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.31,000/- || தேர்வு கிடையாது!

பிப்ரவரியில் 2024-25 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த திரு.பாலகோபால், ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம்/ஓய்வூதியத்துடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு தவணை DA/DR வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும் நீதித்துறை அதிகாரிகளின் DA மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் DR 38% லிருந்து 46% ஆக உயரும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணி அதிகாரிகளின் டிஏ தற்போதைய 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. அதே போல் இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!