காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 3) காவிரி ஆற்றில் மூழ்கி பலியான 3 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதல்வர் நிதியுதவி
தமிழகத்தில் ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 3) பல கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி காசிபாளையத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. கொத்தளம் புதூர் மதுரை கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்றனர். அங்கே ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் ஜெகதீஷ்(வயது 18), சவுத்ரி (வயது 14), சுப்புராஜ்(வயது 17) ஆகிய மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தமிழகத்தில் வெப்பநிலை மேலும் உயரும் – அடுத்த 3 நாட்களுக்கு இப்படி தான்.. வானிலை மையம் தகவல்!
அதில் இரண்டு பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவரின் உடல் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அந்த மூவரும் இறந்ததை கேட்டு வேதனை அடைந்தேன் என தன்னுடைய வருத்தத்தை அவர் தெரிவித்துள்ளார்.