தமிழக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம் – ஏற்பாடு தீவிரம்!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான வேலைப்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திறன் மேம்பாட்டு பயிற்சி:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்களையும் தாண்டி கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஓராண்டில் 6,000 தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும், இந்த பயிற்சி திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி, தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 தலைமையாசிரியர் தேர்வு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 250 தலைமை ஆசிரியர்களுக்கு மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பில்லர் வளாகத்தில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் அனைவரும் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் நாளை (செப்.14) மின்தடை – முக்கிய பகுதிகளில் கரண்ட் இருக்காது!
அதாவது, முதல் மூன்று குழுக்களுக்கு செப்.20, 21 ஆம் தேதியிலும், அடுத்த 2 குழுக்களுக்கு அக்.3,4 ஆம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆசிரியர்களுக்கு தங்கும் வசதி, உணவு ஆகிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.