அரசுத்துறைகளில் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அரசுத்துறைகளில் காலியாகவுள்ள 2.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான வேலைப்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
2.5 லட்சம் காலிப்பணியிடங்கள்:
கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சட்டமன்ற தேர்தலில் அறிவித்தபடி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ரூபாய் இரண்டாயிரம் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களும் கூடிய விரைவில் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத விதமாக எகிறும் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அதாவது கர்நாடக அரசு துறைகளில் மட்டுமே 2.5 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் உள்ளதாகவும் இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும், உயர்கல்வி துறையில் மட்டுமே 15000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அறிவித்துள்ளார். தற்போது, உயர்கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் கூடிய விரைவில் இந்த பணியிடங்கள் அனைத்தும் நிரந்தர மற்றும் முழு நேர ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.