1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக அறிவித்த ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மேலும் கடந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் நலன் கருதி இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கல்வி நிறுவன கட்டட வரன்முறை விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு!!
பாதிப்பு:
ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றின் பரவல் சற்று குறைந்து வந்த காரணத்தால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு மாநில அரசுகள் அனுமதியளித்தது. இதனால் ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் பீஹார் மாநிலத்தில் திறக்கப்பட்டது. முதலில் உயர் வகுப்புகளுக்கு மட்டும் திறக்கப்பட்டு பின்னர் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் கர்நாடகா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வின்றி தேர்ச்சி:
பீஹார் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அரசு குறிப்பிட்டுள்ள தேதிகளில் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி அடைவதாக பீஹார் மாநில அரசு அறிவித்துள்ளது. தொற்றின் தாக்கத்தின் காரணமாக நடப்பு ஆண்டில் பள்ளிகள் சிறப்பாக செயல்பட முடியாததாலும், தற்போதைய தொற்று அதிகரித்துள்ள நிலையில் தேர்வு நடத்துவது ஆபத்தானதும் கூட என்பதை உணர்ந்த பீஹார் மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்