தமிழகத்தில் கல்வி நிறுவன கட்டட வரன்முறை விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு!!
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் ஏப்ரல் 4ம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவன கட்டடங்கள்:
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை அரசு உரிய அனுமதி கொடுத்த பின்னர் தான் செயல்படுத்த முடியும். கல்வி நிலையங்கள் கற்றலுக்கான கட்டடங்களை வரன்முறைப்படுத்த ஒரு சிறப்பு திட்டம் கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவங்களின் வளாகங்களில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் அதிகமாக உள்ளது.
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆன்லைனில் இல்லை – தேர்வு வாரியம் அறிவிப்பு!!
நீதிமன்ற தடை:
அரசின் இந்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 2018 ஜூன் 14ம் தேதி முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை கல்வி வளாக கட்டங்களை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
டி.டி.சி.பி அறிவிப்பு:
கல்வி வளாக கட்டடங்களை வரன்முறைப்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி உத்தரவிட்டது. இதனால் ஒப்புதல் அளிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் உரிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட நகர், ஊரமைப்பு அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை வழங்க கூறப்பட்டது.
விண்ணப்பங்களை வழங்க தவறியவர்களுக்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை கல்வி நிறுவன கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், வரன்முறை பெற விரும்புபவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் கமிஷன் அனுமதி இந்த திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்